Published : 28 Oct 2025 09:13 AM
Last Updated : 28 Oct 2025 09:13 AM

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: நாகாலாந்து பதிலடி

பெங்​களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது.

இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 58 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 150 ரன்​கள் சேர்த்​தது. தேகா நிஸ்​சல் 80, யுகந்​தர் சிங் 58 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை இரு​வரும் தொடர்ந்து விளை​யாடி​னார்​கள். யுகந்​தர் சிங் 67 ரன்​கள் எடுத்த நிலை​யில் சந்​திரசேகர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து இம்​லிவதி லெம்​தூர் களமிறங்கினார்.

நாகாலாந்து அணி 127 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 365 ரன்​கள் எடுத்​திருந்​த​போது போதிய வெளிச்​சம் இல்​லாத காரணத்​தால் 3-வது நாள் ஆட்​டம் முடித்​துக்​கொள்​ளப்​பட்​டது.

தேகா நிஸ்​சல் 161 ரன்​களும் இம்​லிவதி லெம்​தூர் 115 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். கைவசம் 5 விக்​கெட்​கள் இருக்க 147 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள நா​காலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்​டத்தை எதிர்கொள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x