Published : 27 Oct 2025 10:47 AM
Last Updated : 27 Oct 2025 10:47 AM

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி வீரர் ரஞ்சன் பால் இரட்டை சதம்

திமாப்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் நாகாலாந்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்​சன் பால் அபார​மாக விளை​யாடி இரட்​டைச் சதம் விளாசி​னார்.

‘ஏ’ பிரி​வில் இடம்​பெற்​றுள்ள தமிழக, நாகாலாந்து அணி​கள் மோதிய லீக் ஆட்​டம் நேற்று முன்​தினம் திமாப்​பூரிலுள்ள நாகாலாந்து கிரிக்​கெட் மைதானத்​தில் தொடங்​கியது. முதலில் விளை​யாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 399 ரன்​கள் குவித்​திருந்​தது. விமல் குமார் 189 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-ம் நாள் ஆட்​டத்தை பிரதோஷ் ரஞ்​சன் பால் 156 ரன்​களு​ட​னும், ஆந்த்ரே சித்​தார்த் 30 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். ஆந்த்ரே சித்​தார்த் 65 ரன்​கள் எடுத்த நிலை​யில் வீழ்ந்​தார். மறு​முனை​யில் சிறப்​பாக விளை​யாடிய பிரதோஷ் ரஞ்​சன் பால் இரட்​டைச் சதம் விளாசி​னார். அவர் 314 பந்​துகளில் 201 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​திரஜித் 32 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். 115 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 512 ரன்​கள் எடுத்த நிலை​யில் தமிழக அணி முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய நாகாலாந்து அணி, 2-ம் நாள் ஆட்​டநேர இறு​தி​யில் 4 விக்​கெட் இழப்​புக்கு 150 ரன்​கள் எடுத்​துள்​ளது. டெகா நிஷ்சல் 80 ரன்​களும், யுகந்​தர் சிங் 58 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் உள்​ளனர்.

குர்​ஜப்​நீத் சிங் 12 ஓவர்​கள் பந்​து​வீசி 34 ரன்​கள் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். 362 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்று 3-ம் நாள் ஆட்​டத்தை நா​காலாந்​து அணி தொடர்ந்​து விளை​யாட உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x