Published : 27 Oct 2025 09:59 AM
Last Updated : 27 Oct 2025 09:59 AM
மஸ்கட்: ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்பைக்கான ரக்பி போட்டியின் அரை இறுதியில் விளையாட இந்திய ஆடவர் அணியினர் தகுதி பெற்றுள்ளனர்.
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியினர் 14-10 என்ற கணக்கில் லெபனானையும், 2-வது ஆட்டத்தில் 26-5 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற கால் இறுதியில் இந்தியா 21-7 என்ற கணக்கில் ஈரான் நாட்டு அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.
இதையடுத்து அரை இறுதிச் சுற்றில் இந்திய அணி, சவுதி அரேபியா அணியைச் சந்திக்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT