Published : 26 Oct 2025 10:25 AM
Last Updated : 26 Oct 2025 10:25 AM

தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்

சென்னை: தமிழ்​நாடு பாராலிம்​பிக் விளை​யாட்டு சங்​கம் சார்​பில் 6-வது ஜூனியர் மற்​றும் 11-வது சீனியர் மாநில அளவி​லான பாரா நீச்​சல் சாம்​பியன்​ஷிப் போட்டி நேற்று வேளச்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் நீச்​சல்​குள பயிற்சி வளாகத்​தில் நடை​பெற்​றது.

50 மீட்​டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்​டர் ஃப்ரீ ஸ்டைல் உள்ளிட்ட 13 பிரிவு​களில் போட்​டிகள் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதில் கலந்​து​கொள்​ளும் வீரர்​கள் அதி​காலை 6.30 மணிக்கே நீச்​சல்​குளத்​திற்கு வரவேண்​டும் எனவும், 7 மணி முதல் சான்​றிதழ் சரி​பார்ப்​பு​கள் நடை​பெறும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இவை முடிந்​த​பின்​னர் 9 மணிக்கு எந்​தெந்த பிரிவு​களில் வீரர்​கள் பங்​கேற்​பார்​கள் என்​பது வகைப்​படுத்​தப்​படும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதனால் மழையை​யும் பொருட்​படுத்​தாதுதமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து வீரர்​கள் தங்​களது பெற்​றோருடன் காலை 6 மணி முதலே நீச்​சல்​குள வளாகத்​துக்கு வரத்​தொடங்​கினர். ஆனால் அவர்​களை, அங்கு ஒருங்​கிணைப்​ப​தற்கு போது​மான ஏற்​பாடு​கள் ஏதும் போட்டி அமைப்​பாளர்​களால் செய்​யப்​பட​வில்​லை. அவர்​கள் கூறியபடி சான்​றிதழ் சரி​பார்ப்​பு​கள், மருத்​துவ பரிசோதனை உள்​ளிட்​டவை குறித்த நேரத்​தில் தொடங்​கப்​பட​வில்​லை.

இதற்​கிடையே மழை​யும் குறுக்​கிட்​ட​தால் போட்​டி​யில் பங்​கேற்​கும் வீரர்​களுக்கு ஐ.டி. கார்டு வழங்​கு​வ​தி​லும் தாமதம் நில​வியது. இதற்கு அங்கு வைக்​கப்​பட்​டிருந்த பிரிண்​டர் பழு​தான​தாக காரணம் கூறப்​பட்​டது. நேரம் செல்​லச் செல்ல போட்​டி​யில் பங்​கேற்க வந்​திருந்த பாரா நீச்​சல் வீரர்​கள் சோர்​வடை​யத் தொடங்​கி​னார்​கள்.

ஒரு​வழி​யாக மாலையில் போட்​டியை தொடங்​கி​னார்​கள். பல்​வேறு பிரிவு​களில் போட்​டிகள் நடத்த வேண்​டியது இருந்​த​தால் அவசரக​தி​யில் வீரர்​களை அடுத்​தடுத்து போட்​டி​யில் பங்​கேற்​கச் செய்​தனர். இதனால் அவர்​களால் போதிய திறனை வெளிப்​படுத்த முடி​யாமல் போனது.

கடந்த சில மாதங்​களுக்கு முன்​னர் நடத்​தப்​பட்ட பாரா நீச்​சல் போட்​டிகளில் பதக்​கம் வென்ற வீரர்​கள் கூட இன்​றைய போட்டி கால​தாமத​மாக நடத்​தப்​பட்​ட​தால் சிறப்​பாக செயல்பட முடி​யாமல் போனது. இது வீரர்​களை​யும், அவர்​களுடைய பெற்றோர்களையும் மன வேதனை அடையச் செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x