Published : 25 Oct 2025 10:30 AM
Last Updated : 25 Oct 2025 10:30 AM
சென்னை: தொழில்முறை ரீதியிலான கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் போட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் குத்துச்சண்டை அகாடமியில் நேற்று தொடங்கிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் நடத்துகிறது. இந்த தொடரில் கோவை ஸ்மாஷர்ஸ், டிஆர்ஏ டேஷர்ஸ், சேலம் சூப்பர் ஸ்டார்ஸ், திருச்சி டிஎஸ்யு வீரன்ஸ், அதிசய சென்னை டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
ஒவ்வொரு அணியிலும் 12 வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 60 பேர் இடம் பெற்றுள்ளனர். 12 எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறுபவருக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.
ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு அணிகளும் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT