Published : 25 Oct 2025 09:57 AM
Last Updated : 25 Oct 2025 09:57 AM

‘அரை இறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது’ - ஸ்மிருதி மந்தனா

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி டக்​வொர்த் லீவிஸ் விதி​முறைப்​படி 53 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்​தி​யது.

முதலில் பேட் செய்த இந்​திய அணி 49 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 340 ரன்​கள் குவித்​தது. ஸ்மிருதி மந்​தனா 109 ரன்​களும், பிர​திகா ராவல் 122 ரன்​களும், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 76 ரன்​களும் விளாசி அசத்​தினர்.

மழை குறுக்​கீடு காரண​மாக 44 ஓவர்​களில் 325 ரன்​கள் என்ற இலக்கை விரட்​டிய நியூஸிலாந்து அணி​யால் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 271 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. இந்​திய அணி​யின் பந்து வீச்​சில் ரேணுகா சிங், கிரந்தி கவுடு ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி 6 புள்​ளி​களு​டன் கடைசி அணி​யாக அரை இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தது.

போட்டி முடிவடைந்​ததும் இந்​திய அணி​யின் துணை கேப்​ட​னான ஸ்மிருதி மந்​தனா கூறும்​போது, “நாங்​கள் முன்​னேறி​யுள்​ளது எனக்கு மிகப்​பெரிய நிம்​ம​தி​யைத் தந்​துள்​ளது. கடந்த 3 ஆட்​டங்​கள் எங்​களுக்கு மிக​வும் கடின​மாக அமைந்​தன. இந்த 3 ஆட்​டங்​களி​லும் நாங்​கள் சிறப்​பாகவே விளை​யாடினோம்.

ஆனால் வெற்றி பெற​முடிய​வில்​லை. இந்​நிலை​யில் வாழ்வா சாவா ஆட்​டத்​தில் நாங்​கள் வெற்றி பெற்​றுள்​ளது எங்​களுக்கு மனநிம்​ம​தி​யைத் தந்​துள்​ளது. பிர​திகா ராவல் அற்​புத​மான இன்​னிங்ஸை வெளிப்​படுத்​தி​னார். களத்​தில் என்​னுடைய இயற்​கை​யான விளை​யாட்டை விளையாட அவர் அனுமதித்தார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x