Published : 24 Oct 2025 11:10 AM
Last Updated : 24 Oct 2025 11:10 AM
மிர்பூர்: வங்கதேசம் - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. சவுமியா சர்க்கார் 86 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் சைஃப் ஹசன் 72 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் விளாசினர்.
297 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 30.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அகீல் ஹோசைன் 27, பிரண்டன் கிங் 18, அலிக் அதானஸ் 15, கீசி கார்ட்டி 15, ஜஸ்டின் கீரிவ்ஸ் 15, ஷேர்ஃபேன் ரூதர்போர்டு 12 ரன்கள் சேர்த்தனர். வங்கதேசம் அணி சார்பில் நசம் அகமது, ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் மெஹிதி ஹசன், தன்விர் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் வங்கதேசம் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் ஓவரில் வெற்றி கண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT