Published : 24 Oct 2025 10:48 AM
Last Updated : 24 Oct 2025 10:48 AM

நியூஸிலாந்து உடனான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இங்கிலாந்து!

ஆக்​லாந்து: நியூஸிலாந்து - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது டி 20 போட்டி ஆக்​லாந்​தில் நேற்று நடை​பெற்​றது. நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்​தது. 3 பந்​துகள் மட்​டுமே வீசப்​பட்ட நிலை​யில் மழை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது.

சுமார் 80 நிமிடங்​களுக்கு பிறகு ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்ட நிலை​யில் 14 ஓவர்​களை கொண்ட போட்​டி​யாக நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடிய நிலை​யில் 3.1 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 38 ரன்​கள் எடுத்​திருந்த போது மீண்​டும் மழை​யால் ஆட்​டம் தடைபட்​டது.

சிறிது நேரம் கழித்து மழை நின்ற நிலை​யில் போட்​டியை 8 ஓவர்​களாக குறைக்க முடிவு செய்​யப்​பட்​டது. வீரர்​கள் களத்​தில் இறங்க தயா​ராக இருந்த நிலை​யில் மீண்​டும் மழை பெய்த​தால் ஆட்​டம் கைவிடப்​பட்​டது.முதல் போட்​டி​யும் மழை காரண​மாக கைவிடப்​பட்​டிருந்​தது. 2-வது போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 65 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. இதனால் 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை இங்​கிலாந்​து அணி 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x