Published : 22 Oct 2025 10:12 AM
Last Updated : 22 Oct 2025 10:12 AM

தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு

சென்னை: 4-வது தெற்கு ஆசிய கூட்​டமைப்பு சீனியர் தடகள சாம்​பியன்​ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் நடை​பெறுகிறது.

இதில் இந்​தி​யா​வில் இருந்து 86 வீரர், வீராங்​க​னை​கள் கொண்ட அணி கலந்து கொள்​கிறது. இந்த அணி​யில் தமிழகத்​தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.

ஆடவர் பிரி​வில் தமிழகத்தை சேர்ந்த மானவ் (110 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டம்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்​டு​தல்), தினேஷ் (டிரிப்​பிள் ஜம்ப்), தமிழ் அரசு (4X100 மீட்​டர் ரிலே), சரண் (4X100 மீட்​டர் ரிலே) ஆகியோ​ரும் மகளிர் பிரி​வில் ஒலிம்பா ஸ்டாபி (400 மீட்​டர் ஓட்​டம், 400 மீட்​டர் தடை தாண்​டு​தல் ஓட்​டம், 4X100 மீட்​டர் ரிலே), நந்​தினி (100 மீட்​டர் தடை தாண்​டு​தல் ஓட்​டம்), கோபிகா (உயரம் தாண்​டு​தல்), பவானி யாதவ் (டிரிப்​பிள் ஜம்ப்), சுபா தர்​ஷினி (4X100 மீட்​டர் ரிலே) ஆகியோ​ரும் இடம்​ பெற்​றுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x