Published : 22 Oct 2025 09:47 AM
Last Updated : 22 Oct 2025 09:47 AM

ஆஸி. தொடரே ரோஹித், கோலியின் எதிர்காலம்: ரிக்கி பாண்டிங் கருத்து

துபாய்: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சீனியர் பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்​மா​வும், விராட் கோலி​யும் தற்​போது ஆஸ்​திரேலியா சுற்​றுப்​பயணத்​தில் அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கின்​றனர்.

பவுன்ஸ் ஆடு​கள​மான பெர்த்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் ரோஹித் சர்மா 8 ரன்​களில் ஆட்​ட​மிழந்த நிலை​யில், விராட் கோலி 8 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காமல் வெளி​யேறி ஏமாற்​றம் அளித்​தார்.

இவர்​கள் இரு​வருமே 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளை​யாட விரும்​பு​கின்​றனர். இதனால் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான தொடர் அவர்​களுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது.

இந்​நிலை​யில் ஐசிசி பகுப்​பாய்வு நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்ட இந்​திய அணி​யின் முன்​னாள் பயிற்​சி​யாள​ரான ரவி சாஸ்​திரி​யுடன் பங்​கேற்ற ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான ரிக்கி பாண்​டிங் கூறிய​தாவது:

யாரிட​மிருந்​தும் எனக்​குப் பிடிக்​காத ஒரு விஷ​யம் என்​னவென்​றால், 'நான் விளை​யாட்​டில் எல்​லா​வற்​றை​யும் சாதித்​து​விட்​டேன்' என்​பது​தான், இப்​போதே 2027-ம் ஆண்டு உலகக் கோப்​பையை அடைய முயற்சி செய்​யாமல், சில குறுகிய கால இலக்​கு​களை கொண்​டிருக்க வேண்​டும் என்று நான் நினைக்​கிறேன்.

விராட் கோலி எப்​போதும் மிக​வும் ஊக்​கம் கொண்ட நபராக இருந்து வரு​கிறார். அடுத்த உலகக் கோப்​பைக்​காகக் காத்​திருந்து நேரத்​தைக் பாழாக்​கு​வதற்கு பதிலாக, தற்​போது நடை​பெற்று வரும் ஆஸ்​திரேலியா தொடரில் அவர், சில இலக்​கு​களை​யும் அடையக்​கூடிய விஷ​யங்​களை​யும் தனக்​குத்​தானே அமைத்து கொண்​டிருப்​பார் என்று நினைக்க நான் விரும்​பு​கிறேன்.

ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோரை பற்றி நமக்​குத் தெரிந்​தது எல்​லாம், அவர்​கள் சிறந்த வீரர்​கள் என்​பது​தான். ஆம், நிச்​சய​மாக அவர்​கள் இந்​தி​யா​வின் சிறந்த அணி​யில் உள்​ளனர். ஆனால் தற்​போது முதல், உலகக் கோப்பை வரை அவர்​களால் தங்​கள் சிறந்த திறனை கண்​டு​பிடிக்க முடி​யு​மா?. இதற்கு பதில், இந்த குறுகிய காலத்​தில் நடை​பெறும் இந்த ஆஸ்​திரேலிய தொடர்​தான். இவ்​வாறு ரிக்கி பாண்​டிங் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x