Published : 19 Oct 2025 07:27 AM
Last Updated : 19 Oct 2025 07:27 AM

உலகக் கோப்பை வில்வித்தை: வெண்கலம் வென்று ஜோதி சுரேகா சாதனை

நான்ஜிங்: உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் 8-வது சீசன் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனி நபர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னாம், அமெரிக்காவின் அலெக்ஸிஸ் ரூயிஸுடன் மோதினார். இதில் ஜோதி சுரேகா 143-140 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை எதிர்கொண்டார் ஜோதி சுரேகா. இதில் ஜோதி சுரேகா 143-145 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜோதி சுரேகா, உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கிரேட் பிரிட்டனின் எலா கிப்சனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் ஜோதி சுரேகா 150-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலகக் கோப்பை வில்வித்தை இறுதி தொடரில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஜோதி சுரேகா படைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x