Published : 18 Oct 2025 09:43 AM
Last Updated : 18 Oct 2025 09:43 AM
ஓடென்ஸ்: டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் முகமது ரியான் அர்டியான்டோ, ரஹ்மத் ஹிதாயத் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
65 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-15, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT