Published : 16 Oct 2025 07:30 AM
Last Updated : 16 Oct 2025 07:30 AM

தேசிய சப்-ஜூனியர் கால்பந்து போட்டிக்கான பயிற்சி முகாம்

சென்னை: தேசிய சப்​-ஜூனியர் ஆடவர் கால்​பந்​துப் போட்​டிக்​கான பயிற்சி முகாம் அக்​டோபர் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தேனி​யில் நடை​பெறவுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: 2025-26-ம் ஆண்​டுக்​கான தேசிய சப்​-ஜூனியர் ஆடவர் கால்​பந்​துப் போட்டி சத்​தீஸ்​கர் மாநிலம் நாராயண்​பூரில் நடை​பெறவுள்​ளது.

இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் தமிழக அணிக்​கான பயிற்சி முகாம் தேனி மாவட்​டம் போட்​டி​நாயக்​க​னூரில் உள்ள இசட்​கேஎம் மேல்​நிலைப்​பள்​ளி​யில் வரும் 18-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது.

பயிற்சி முகா​முக்​குத் தேர்​வான தமிழக வீரர்​கள் விவரம்: ஓமேஷ்வர், அங்​குஷ் பிஸ்​வாஸ், நிஷாந்த் ராய், அஸ்​வின் கார்த்​திக், முகமது ரைஹான், ரோஷன், கோகுல், கவின் ஜெய், தீர்த் கோத்​தா​ரி, தஹீலம்​பம் லான்​சென்​பா, நிரஞ்​சன், முகமது அஸ்​லான் லாண்ட்​ஜ், கே.ரோஷன், புவன், கீர்த்​தன் கெர்​ராட், அபிட் நெகோ, ஜேக் ரொமாரியோ, ஜெரமை​யா, ரித்​திக் செந்​தில்​கு​மார், குஞ்​சாப்பு நிகில் தேஜ், சவுவிக் ஹால்​டர், கேப்​ரியோ எஸ்​.​யுப்​பிலி, கனீஷ் ஆர்​யா, பி.டுடே, கே.​வினீத்.இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x