Published : 14 Oct 2025 11:03 AM
Last Updated : 14 Oct 2025 11:03 AM

கிரிக்கெட்டில் சூப்பர் ஓவருக்கான விதிகள் என்னென்ன? - முழு விளக்கம்

டி20 மற்​றும் ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளில் ஆட்​டம் டையில் முடிவடைந்​த​தால் வெற்​றியை தீர்​மானிப்​ப​தற்​காக சூப்​பர் ஓவர் முறை கடைபிடிக்​கப்​படு​கிறது.

இதில் இரண்டு அணி​யும் தலா ஒரு ஓவர் பேட்​டிங், பந்து வீச்​சில் ஈடு​படும். பேட்​டிங்​கில் ஓர் அணி​யில் 3 பேட்​ஸ்​மேன்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். ஆனால் 2 விக்​கெட்​கள் மட்​டுமே கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும். இதில் கன்கஷன் மாற்று வீர​ராக களமிறங்​கிய வீரர் கூட பேட்​டிங் செய்​ய​லாம்.

சூப்​பர் ஓவரில் பேட்​டிங் செய்​யும் அணி 2 விக்​கெட்​களை இழந்​து​விட்​டால் அந்த அணி​யின் இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​து​விடும். இந்த இரு அணி​களுக்​கும் தலா ஒரு டிஆர்எஸ் வழங்​கப்​படும். இதை அவர்​கள் பயன்​படுத்​தும் போது அந்த முடிவு மாறா​விட்​டால் அதை அவர்​கள் மீண்​டும் பயன்​படுத்த முடி​யாது. இரு இன்​னிங்​ஸிலும் எந்த அணி அதிக ரன்​கள் சேர்க்​கிறதோ அந்த அணியே வெற்​றி​யாள​ராக அறிவிக்​கப்​படு​வார்​கள்.

சூப்​பர் ஓவரிலும் ஆட்​டம் டையில் முடிவடைந்​தால் போட்டியில் மீண்​டும் சூப்​பர் ஓவர் நடத்​தப்​படும். இந்த வகை​யில் சூப்​பர் ஓவர்​களை நடத்​து​வதற்​காக மட்​டும் ஒரு​மணி நேரம் ஒதுக்​கப்​படும். இதற்​குள் சூப்​பர் ஓவரை நடத்தி முடிக்க முடி​யா​விட்​டால் கூடு​தலாக 20 நிமிடங்​கள் வழங்​கப்​படும். இதி​லும் சூப்​பர் ஓவரை நடத்தி தீர்​மானிக்க முடிய​வில்லை என்​றால் இறு​தி​யில் ஆட்​டம் டை ஆனதாக அறிவிக்​கப்​பட்டு இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி வழங்​கப்​படும்.

வானிலை காரண​மாக சூப்​பர் ஓவரை நடத்த முடி​யாத நிலை ஏற்​பட்​டாலும் இதே விதி​முறை​தான் பின்​பற்​றப்​படும். ஒரு​வேளை நாக் அவுட் சுற்​றுகளில் சூப்​பர் ஓவரை நடத்த முடி​யாத நிலை ஏற்​பட்​டால் எந்த அணி அதிக புள்​ளி​களை பெற்​றுள்​ளதோ அந்த அணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​படும். ஒரு​வேளை இரு அணி​களும் சமஅளவி​லான புள்​ளி​களை பெற்​றிருந்​தால் அப்​போது நிகர ரன் ரேட் கருத்​தில் கொள்​ளப்​படும். அப்​போது மற்ற போட்​டிகளில் அபராதம், எச்​சரிக்​கை, இடை நீக்க நேரம் என ஏதேனும் இருந்​தா​லும் அது​வும் கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும்.

பிர​தான ஆட்​டத்​தில் எந்த அணி 2-வது பேட் செய்​ததோ அந்த அணியே சூப்​பர் ஓவரில் முதலில் பேட் செய்​யும். ஒரு​வேளை 2-வது முறை​யாக சூப்​பர் ஓவர் நடத்​தப்​பட்​டால் அப்​போது பிர​தான ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த அணி முதலில் பேட் செய்ய களமிறங்​கும். மேலும் சூப்​பர் ஓவரில் பந்து வீச்​சுக்கு பயன்​படுத்​தப்​படும் பந்தை அந்​தந்த அணி​களே தேர்வு செய்து கொள்​ளலாம்.

முதல் சூப்​பர் ஓவரில் ஆட்​ட​மிழந்த பேட்​ஸ்​மேன் 2-வது சூப்​பர் ஓவரில் பேட் செய்ய முடி​யாது. ஆனால் 3-வது ஓவரில் பேட் செய்​ய​லாம். அதேவேளை​யில் ஒரு சூப்​பர் ஓவரில்​ பந்​து வீசிய பந்​து வீச்​​சாளர்​ 2-வது சூப்​பர்​ ஓவரில்​ பந்​து வீச முடி​யாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x