Published : 10 Oct 2025 09:39 AM
Last Updated : 10 Oct 2025 09:39 AM

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து: தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்​பந்து சாம்​பியன்​ஷிப்​பின் இறு​திக்​கட்ட போட்​டிகள் சத்​தீஸ்​கர் மாநிலம் நாராயண்​பூரில் நடை​பெற்று வரு​கிறது. 10 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரி​வில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்​டம் ஒன்​றில் மேற்கு வங்​கம் - சத்​தீஸ்கர் அணி​கள் மோதின.

இதில் மேற்கு வங்க அணி 3-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இதன் மூலம் அந்த அணி 10 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் முதலிடம் பிடித்து அரை இறுதி போட்​டிக்கு முன்​னேறியது.

‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் தமிழ்​நாடு - ஒடிசா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தின. இந்த ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது. தமிழ்​நாடு அணி சார்​பில் 10-வது நிமிடத்​தில் பிரியதர்​ஷினி கோல் அடித்​தார். ஒடிசா அணி தரப்​பில் 55-வது நிமிடத்​தில் பியாரி ஸாக்ஸா கோல் அடித்​தார்.

லீக் சுற்​றின் முடி​வில் தமிழ்​நாடு அணி 4 ஆட்​டங்​களில் 2 வெற்​றி, ஒரு டிரா, ஒரு தோல்​வி​யுடன் 7 புள்​ளி​களை பெற்று 2-வது இடம் பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறியது. வரும் 13-ம் தேதி நடை​பெறும் அரை இறுதி ஆட்​டத்​தில் தமிழ்​நாடு அணி, மணிப்​பூருடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. அன்​றைய தினம் நடை​பெறும் மற்​றொரு அரை இறுதி ஆட்​டத்​தில் மேற்கு வங்​கம் - உத்​தரபிரதேசம் அணி​கள் மோதுகின்​றன. அரை இறுதி ஆட்​டங்​களில் வெற்றி பெறும் அணி​கள் 15-ம் தேதி நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் பலப்​பரீட்​சை நடத்​தும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x