Published : 29 Sep 2025 07:31 AM
Last Updated : 29 Sep 2025 07:31 AM
சென்னை: புரோ கபடி லீக் 12-வது சீசனின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 10-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
முதல் இரண்டு கட்ட போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 3-வது கட்ட போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. புரோ கபடி லீக் வருடங்களுக்கு பின்னர் சென்னைக்கு திரும்பி உள்ளது.
இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் யுபி யோதாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அக்டோபர் 1-ம் தேதி யு மும்பாவுடன் மோதுகிறது.
தொடர்ந்து 3-ம் தேதி ஹரியான ஸ்டீர்ஸ் அணியுடனும், 5-ம் தேதி பெங்களூரு புல்ஸ் அணியுடனும், 7-ம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது தமிழ் தலைவாஸ் அணி. நடப்பு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகளை பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
தபாங் டெல்லி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பல்தான் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் 12 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியை தமிழ் தலைவாஸ் அணி சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT