Published : 29 Sep 2025 07:07 AM
Last Updated : 29 Sep 2025 07:07 AM
ஷார்ஜா: மேற்கு இந்தியத் தீவுகள் - நேபாளம் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய் நேபாளம் 8 விக்கெட்கள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் பவுடல் 38, குஷால் மல்லா 30, குல்ஷன் ஜா 22, திபேந்திரா சிங் அய்ரீ 17 ரன்கள் சேர்த் தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4, நவீன் பிடாசி 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
149 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக நவீன் பிடாசி 22, ஃபேபியன் ஆலன் 19, அமிர் ஜாங்கோ 19, கேப்டன் அகீல் ஹோசைன் 18, அக்கீம் அகஸ்டே 15 ரன்கள் சேர்த்தனர். நேபாளம் அணி தரப்பில் குஷால்புர்தெல் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஐசிசி முழுநேர உறுப்பினர் அணிக்கு எதிராக நேபாளம் அணி வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 2014-ம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேபாளம் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அப்போது ஆப்கானிஸ்தான் ஐசிசி-யின் முழுநேர உறுப்பினர் நாடாக இல்லாமல் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT