Published : 27 Sep 2025 06:53 AM
Last Updated : 27 Sep 2025 06:53 AM

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த முயற்சி செய்வோம்: பாக். கேப்டன் சல்மான் அலி ஆகா

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் வங்​கதேச அணியை 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றது பாகிஸ்​தான் அணி. வங்​கதேச அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 135 ரன்​களே சேர்த்த போதி​லும் பாகிஸ்​தான் பந்து வீச்​சாளர்​கள் சிறப்​பாக செயல்​பட்டு வெற்றி தேடி கொடுத்தனர்.

குறிப்​பாக ஷாகின் ஷா அப்​ரீடி பேட்​டிங்​கில் 13 பந்​துகளில் 19 ரன்​களும், பந்து வீச்​சில் 17 ரன்​களை மட்​டும் வழங்கி 3 விக்​கெட்​களை​யும் வீழ்த்தி அசத்​தி​னார். இந்த வெற்​றி​யின் மூலம் நாளை (28-ம் தேதி) நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வுடன் பலப்​பரீட்சை நடத்த உள்ளது பாகிஸ்தான் அணி. வங்​கதேச அணிக்கு எதி​ரான வெற்​றிக்​குப் பின்​னர் பாகிஸ்​தான் அணி​ கேப்​டன் சல்மான் அலி ஆகா கூறும்​போது, “இது​போன்ற ஆட்​டங்​களில் வெற்றி பெறு​வதற்​கு, நாங்​கள் ஒரு சிறப்பு அணி​யாக இருக்க வேண்​டும்.

அனை​வரும் சிறப்​பாக விளை​யாடி​னார்​கள். பேட்​டிங்​கில் சில முன்​னேற்​றம் தேவை. நாங்​கள் அதற்​காக உழைப்​போம். தற்​போதைய வெற்​றி​யால் உற்​சாக​மாக இருக்​கிறோம். இறு​திப் போட்​டி​யில் என்ன செய்ய வேண்​டும் என்​பது எங்​களுக்​குத் தெரி​யும். எந்த அணி​யை​யும் வெல்​லும் அளவுக்கு நாங்​கள் சிறந்த அணி​யாக உள்​ளோம். இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணியை வீழ்த்த முயற்சி செய்​வோம்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x