Published : 25 Sep 2025 06:23 AM
Last Updated : 25 Sep 2025 06:23 AM

யு-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

பிரிஸ்​பன்: இந்​தியா யு-19 மற்றும் ஆஸ்​திரேலியா யு-19 அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பிரிஸ்​பன் நகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் பேட் செய்த இந்​தியா யு-19 அணி 49.4 ஓவர்​களில் 300 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தொடக்க வீர​ரான வைபவ சூர்​ய​வன்ஷி 68 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​கள் விளாசிய நிலை​யில் யாஷ் தேஷ்​முக் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய விஹான் மல்​ஹோத்ரா 74 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும், விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான அபிக்​யான் 64 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 71 ரன்​களும் சேர்த்​தனர். ஆஸ்​திரேலியா யு-19 அணி சார்​பில் வில் பைரோம் 3, யாஷ் தேஷ்​முக் 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

இந்த ஆட்​டத்​தில் 6 சிக்​ஸர்​கள் விளாசி​யதன் மூலம் யு-19 கிரிக்​கெட் போட்​டி​யில் அதிக சிக்​ஸர்​கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்​துள்​ளார். 14 வயதான வைபவ் சூர்​ய​வன்​ஷி, 10 இன்​னிங்​ஸில் 41 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டுள்​ளார். இந்த வகை​யில் முன்​முகுந்த் சந்த் 21 இன்​னிங்​ஸில் 38 சிக்​ஸர்​கள் அடித்​திருந்​ததே சாதனை​யாக இருந்​தது. இதை தற்​போது முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்​ளார் வைபவ் சூர்​ய​வன்​ஷி.

301 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலியா யு-19 அணி 47.2 ஓவர்​களில் 249 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜெய்​டன் டிராப்​பர் 72 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 107 ரன்​கள் விளாசி​னார். அவருக்கு அடுத்​த​படி​யாக ஆர்​யன் சர்மா 38, அலெக்ஸ் டர்​னர் 24 ரன்​கள் எடுத்​தனர்.

இந்​தியா யு-19 அணி தரப்​பில் கேப்​டன் ஆயுஷ் மாத்ரே 3, கனிஷ்க் சவு​கான் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​தியா யு-19 அணி 3 ஆட்டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரை 2-0 என தன் வசப்​படுத்​தி​யது. முதல் போட்​டி​யில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில்​ வெற்றி பெற்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x