Published : 21 Sep 2025 08:54 AM
Last Updated : 21 Sep 2025 08:54 AM

மந்தனாவின் அதிரடி சதம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி

புதுடெல்லி: இந்​தியா - ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது கிரிக்​கெட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய மகளிர் அணி 47.5 ஓவர்​களில் 412 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. பெத் மூனி 75 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 23 பவுண்​டரி​களு​டன் 138 ரன்​கள் விளாசி​னார். ஜார்​ஜியா வோல் 68 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 81 ரன்​களும், எலிஸ் பெர்ரி 72 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​களும் சேர்த்​தனர்.

413 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணிக்கு ஸ்மிருதி மந்​தனா அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். மட்​டையை சுழற்​றிய அவர், 50 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். இதன் மூலம் சர்​வ​தேச மகளிர் கிரிக்​கெட்​டில் குறைந்த பந்​துகளில் சதம் விளாசிய 2-வது வீராங்​கனை என்ற சாதனையை படைத்​தார். மேலும் இந்​திய வீராங்​க​னை​களில் குறைந்த பந்​துகளில் சதம் விளாசிய தனது முந்​தைய சாதனையை​யும் முறியடித்​தார் மந்​த​னா. இதற்கு முன்னர் அவர், 70 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

இந்த வகை சாதனை​யில் உலக அரங்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் மெக் லேனிங் முதலிடத்​தில் உள்​ளார். அவர், கடந்த 2012-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக 45 பந்​துகளில் சதம் விளாசி​யிருந்​தார்.

அதிரடி​யாக விளை​யாடிய மந்​தனா 63 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 17 பவுண்​டரி​களு​டன் 125 ரன்​கள் விளாசிய நிலை​யில் கிரேஸ் ஹாரிஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 35 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​கள் எடுத்த நிலை​யில் கிம் கார்த் பந்​தில் வெளி​யேறி​னார்.

289 ரன்​களுக்கு 7 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் தீப்தி சர்மா போராடி​னார். வெற்​றிக்கு மேற்​கொண்டு 46 பந்​துகளில் 59 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் மெக் கார்த் பந்​தில் தீப்தி சர்மா ஆட்​ட​மிழந்​தார். அவர், 58 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 72 ரன்​கள் எடுத்​தார். இதன் பின்​னர் ஸ்நே ராணா 35, ரேணுகா சிங் 2 ரன்​களில் வெளி​யேற 47 ஓவர்​களில் 369 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது இந்​திய மகளிர் அணி.

43 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. அத்​துடன் இந்​திய மகளிர் அணிக்கு எதி​ரான இருதரப்பு ஒரு​நாள் போட்​டித் தொடரை இழக்​காத பெரு​மை​யை​யும்​ தக்​க​வைத்​துக்​ ​கொண்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x