Published : 20 Sep 2025 07:13 AM
Last Updated : 20 Sep 2025 07:13 AM
புதுடெல்லி: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் டெல்லியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதன்முறையாக இருதரப்பு தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT