Published : 20 Sep 2025 07:06 AM
Last Updated : 20 Sep 2025 07:06 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இலங்கை - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இலங்கை - வங்​கதேசம் அணி​கள் மோதுகின்​றன.

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் 8 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன. லீக் சுற்​றின் முடி​வில் ‘ஏ’ பிரி​வில் இருந்து இந்​தி​யா, பாகிஸ்​தான் அணி​களும் ‘பி’ பிரி​வில் இருந்து இலங்​கை, வங்​கதேசம் அணி​களும் சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறின. சூப்​பர் 4 சுற்று இன்று தொடங்​கு​கிறது. இதன் முதல் ஆட்​டத்​தில் இலங்கை - வங்​கதேசம் அணி​கள் இரவு 8 மணிக்கு துபா​யில் மோதுகின்​றன.

சரித் அசலங்கா தலை​மையி​லான இலங்கை அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றது தனது பிரி​வில் முதலிடம் பிடித்து இருந்​தது. வங்​கதேச அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், ஹாங் காங் அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், ஆப்​கானிஸ்​தான் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் தோற்​கடித்து இருந்​தது.

எனினும் இலங்கை அணி​யினர் சரிவைச் சந்​திக்​கும் திறன் கொண்​ட​வர்​களாக உள்​ளனர். கடந்த திங்​களன்று ஹாங் காங் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் தொடக்க ஆட்​டக்​காரர் பதும் நிஸ்​ஸங்​கா​வின் அரைசதத்​திற்​குப் பிறகு, அந்த கிட்​டத்​தட்ட தோல்​வியடை​யும் நிலைக்​குத் தள்​ளப்​பட்​டனர். வனிந்து ஹசரங்கா இறு​திக்​கட்​டத்​தில் தனது அதிரடி​யால் வெற்றி தேடிக்​கொடுத்​திருந்​தார்.

நடு​வரிசை பேட்​டிங் பலவீன​மாக காணப்​படு​வது அணி​யின் கவலையை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது. கேப்​டன் சரித் அசலங்​கா, மூத்த வீரர்​களான குசல் பெரே​ரா, தசன் ஷனகா ஆகியோர் நடு​வரிசை​யில் பொறுப்பை உணர்ந்து பேட் செய்​தால் அணி​யின் பலம் அதி​கரிக்​கும்.

தொடக்க வீர​ரான பதும் நிஷங்கா நடப்பு தொடரில் 2 அரை சதங்​களு​டன் 124 ரன்​கள் சேர்த்​துள்​ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பேட்​டிங் வெளிப்​படக்​கூடும்.

முதல் இரு ஆட்​டங்​களி​லும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தத் தவறிய குஷால் மெண்​டிஸ், ஆப்​கானிஸ்​தானுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 52 பந்​துகளில் 74 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பு செய்​திருந்​தார். இடது கை பேட்​ஸ்​மே​னான கமில்
மிஷ​ரா​வும் ஓரளவு ரன்​கள் சேர்த்து வரு​கிறார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்​னிங்ஸ் வெளிப்​படக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இலங்கை அணி 3 ஆட்​டங்​களி​லுமே இலக்கை துரத்​தியே வெற்றி கண்​டுள்​ளது. இதனால் அந்த அணி டாஸை வெல்​லும் பட்​சத்​தில் பந்து வீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்​ளது. பந்து வீச்​சில் நூவன் துஷா​ரா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் தொடக்க ஓவர்​களி​லும், வனிந்து ஹசரங்​கா, அசலங்​கா, தசன் ஷனகா ஆகியோர் நடு ஓவர்​களி​லும் பலம் சேர்க்​கக்​கூடும்.

இதற்​கிடையே இலங்கை அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான துனித் வெல்​லலகே அவசர​மாக தாயகம் புறப்​பட்​டுச் சென்​றுள்​ளார். அவரது தந்தை சுரங்கா மரணம் அடைந்​ததை தொடர்ந்து இறுதி சடங்​கில் பங்​கேற்​ப​தற்​காக துனித் வெல்​லலகே நேற்​று​முன்​தினம் ஆப்​கானிஸ்​தான் அணிக்கு எதி​ரான போட்டி முடிவடைந்​தவுடன் உடனடி​யாக கொழும்பு புறப்​பட்​டுச் சென்​றார். இதனால் அவர், தொடரின் எஞ்​சிய ஆட்​டங்​களில் விளை​யாடு​வாரா என்​பது சந்​தேக​மாகி உள்​ளது.

வங்​கதேச அணி​யானது சூப்​பர் 4 சுற்று வாய்ப்பை இலங்கை அணி​யின் தயவால் பெற்​றது. இலங்கை அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தான் அணியை வீழ்த்​தி​யதன் காரணமாகவே வங்​கதேச அணி சூப்​பர் சுற்​றில் நுழைந்​தது. ஒரு​வேளை இலங்கை அணி, ஆப்​கானிஸ்​தானிடம் தோல்வி அடைந்​திருந்​தால் வங்​கதேச அணி தொடரில் இருந்து வெளி​யேறி இருக்​கும்.

வங்​கதேச அணி லீக் சுற்​றில் ஹாங் காங் அணியை 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. ஆனால் இலங்கை அணி​யிடம் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. எனினும் இதில் இருந்து மீண்டு வந்து ஆப்​கானிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 8 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கேப்​டன் லிட்​டன் தாஸ், சைப் ஹசன், தன்​ஸித் ஹசன், தவுஹித் ஹிர்​தோய் ஆகியோர் பேட்​டிங்​கில் கூடு​தல் கவனம் செலுத்​து​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x