Published : 14 Sep 2025 09:36 AM
Last Updated : 14 Sep 2025 09:36 AM

உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்

புதுடெல்லி: ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.

சீனாவின் நிங்போ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் தனிநபர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை இஷா சிங் 242.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

சீன வீராங்கனை யாவோ 2-வது இடம் பிடித்து வெள்ளியைக் கைப்பற்றினார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஓ யெஜின் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x