Published : 13 Sep 2025 07:17 AM
Last Updated : 13 Sep 2025 07:17 AM

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: பதக்கம் உறுதி செய்தார் மினாக்‌ஷி

லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைபிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மினாக்‌ஷி ஹூடா, இங்கிலாந்தின் ஆலிஸ் பம்ப்ரேவை எதிர்த்து விளையாடினார்.

இதில் மினாக்‌ஷி ஹூடா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால் பதித்தார். இதன் மூலம் அவர், குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x