Published : 27 Aug 2025 08:46 AM
Last Updated : 27 Aug 2025 08:46 AM

புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சஏ அணிகள் தடுமாற்றம்!

சென்னை: புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் சென்னையில் நேற்று தொடங்கின. செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - சத்தீஷ்கர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 83.2 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாபா இந்திரஜித் 78, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 68, விமல்குமார் 54 ரன்கள் சேர்த்தனர். சத்தீஸ்கர் அணி சார்பில் ஷசாங்க் திவாரி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய சத்தீஸ்கர் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது.

கோஜன் ‘பி’ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் - பெங்கால் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சி லெவன் 61.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பி.சச்சின் 57, சோனு யாதவ் 48, துஷார் ரஹேஜா 38 ரன்கள் சேர்த்தனர். பெங்கால் அணி சார்பில் ராகுல் பிரசாத் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய பெங்கால் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 26 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x