Published : 24 Aug 2025 10:55 AM
Last Updated : 24 Aug 2025 10:55 AM

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளா வருகை: முழு பின்னணி

கொச்சி: நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் நவம்பர் மாதம் பிஃபாவின் நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவுக்கு வருகை தருகிறது. இதை அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போட்டி நவம்பர் 10 - 18ம் தேதிகளுக்கு இடையில் கொச்சி அல்லது திருவனந்தபுரத்தில் நடைபெறக்கூடும்.

அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் தனது எக்ஸ் வலைதள பதிவில், “லயோனல் ஸ்கலோனியின் பயிற்சியின் கீழ் உள்ள அர்ஜெண்டினா தேசிய அணி இந்த ஆண்டில் எஞ்சியுள்ள 2 பிஃபா நட்புரீதியிலான போட்டிகளில் விளையாடும். இதில் முதல் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 14 ம் தேதி வரை, அமெரிக்காவில் நடைபெறும் 2-வது போட்டி நவம்பர் 10 முதல் 18 வரை அங்கோலாவின் லுவாண்டா மற்றும் இந்தியாவின் கேரளாவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள விளை​யாட்டு அமைச்​சர் அப்​துர்​ரஹ்​மான் கூறும்​போது, “கேப்​டன் லயோனல் மெஸ்ஸி உள்​ளிட்ட உலகக் கோப்​பையை வென்ற அர்​ஜெண்​டினா கால்​பந்து அணியினர் வரும் நவம்​பர் மாதம் கேரளா​வுக்கு வருகை தரு​கின்​றனர்.

வரும் நவம்​பர் மாதம் கேரளா​வில் விளை​யாடும் என்று அர்​ஜெண்​டினா தேசிய கால்​பந்து அணி அறி​வித்​துள்​ளது. லயோனல் மெஸ்ஸி தலை​மை​யில் உலகக் கோப்​பையை வென்ற முழு அணி​யும் கேரளா​வில் விளை​யாடும். இதற்​காக அர்​ஜென்​டினா கால்​பந்து சங்​கத்​துக்கு நாங்​கள் நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறோம். இது கேரள கால்​பந்து மற்​றும் முழு விளை​யாட்​டுத் துறைக்​கும் உண்​மை​யிலேயே ஒரு வரலாற்று தருணம்” என்​றார்.

இருப்​பினும், அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கத்​தின் எக்ஸ் வலைதள பதி​வில், லயோனல் மெஸ்​ஸியைப் பற்​றியோ அல்​லது தேசிய அணி​யின் விவரங்​களை பற்​றியோ எது​வும் குறிப்​பிடப்​பட​வில்​லை. மேலும் கேரளா​வில் நடை​பெறும் போட்​டி​யில் எதிரணி எது என்​பதும் முடிவு செய்​யப்​பட​வில்​லை. இந்த ஆட்​டம் பிஃ​பா​வின் நட்​புரீ​தியி​லான போட்டி என்​ப​தால் சர்​வ​தேச அணி​யுடனே அர்​ஜெண்​டினா மோதக்​கூடும்.

முன்​ன​தாக, அர்​ஜெண்​டினா அணி​யின் கேரளா மாநில வருகை சந்​தேகத்​திற்​குரிய​தாக இருந்​தது. ஏனெனில் அந்த நாட்​டின் கால்​பந்து சங்​கம் கேரள சுற்​றுப்​பயணத்தை உறு​திப்​படுத்​த​வில்​லை. மேலும் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடத் தவறியதற்கு கேரள அரசு அதி​காரி​கள் மீது பழி சுமத்​தி​யது அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கம்.

மெஸ்ஸி தலை​மையி​லான அர்​ஜென்​டினா அணியை கேரளா​வுக்கு அழைத்து வரு​வதற்​கான நடவடிக்கை கடந்த ஆண்டு செப்​டம்​பரில் மேற்​கொள்​ளப்​பட்​டது. இதற்​காக கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் அப்​துர்​ரஹ்​மான் ஸ்பெ​யினுக்​குச் சென்று அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கத்​தின் அதி​காரி​களைச் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார். இதைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி கேரளா வருகை தந்து போட்​டிகளில் விளை​யாடும் என அப்​துர் ரஹ்​மான் தெரி​வித்​திருந்​தார்.

ஆனால், அர்​ஜெண்​டினா கால்​பந்து சங்​கத்​தின் தலைமை வணிக பிரிவு அதி​காரி​யான லியாண்ட்ரோ பீட்​டர்​சன் கடந்த 8-ம் தேதி அன்று உலக சாம்​பியன்​களின் கேரளா வருகை உறு​திப்​படுத்​தப்​பட​வில்லை என்று குறிப்​பிட்​டார். இதனால் அப்​துர் ரஹ்​மான் மீது விமர்​சனங்​கள் எழுந்​தன. ஏனெனில் அப்​துர் ரஹ்​மானின் ஸ்பெ​யின் சுற்​றுப்​பயணத்​துக்​காக ரூ.13 லட்​சம் செல​விடப்​பட்​டிருந்​தது. இந்த சூழ்​நிலை​யில் தற்​போது அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் கேரள வருகை உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

கடைசி​யாக அர்​ஜெண்​டினா அணி கடந்த 2011-ம் ஆண்டு கொல்​கத்​தா​வின் சால்ட் லேக் மைதானத்​தில் வெனிசுலா​வுடன் மோதி​யிருந்​தது. இதில்​ அர்​ஜெண்​டி​னா 1-0 என்​ற கோல்​ கணக்​கில்​ வெற்​றி பெற்​றிருந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x