Published : 23 Aug 2025 07:53 AM
Last Updated : 23 Aug 2025 07:53 AM

புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: ஆந்த்ரே சித்தார்த், ஆதிஷ், இந்திரஜித் சதம் விளாசல்

ஆந்த்ரே சித்தார்த், இந்திரஜித், ஆதிஷ்

சென்னை: ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. சென்னை செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘பி’ மைதானத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - மகாராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 90 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 142 பந்துகளில், 4 சிக்ஸர்கள். 15 பவுண்டரிகளுடன் 111 ரன்களும். பாபா இந்திரஜித் 101 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்களும் விளாசினர். பிரதோஷ் ரஞ்ஜன் பால் 76 ரன்கள் சேர்த்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

கோஜன் ‘ஏ’ மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டிஎன்​சிஏ லெவன் - ஹரி​யாணா அணி​கள் மோதின. டிஎன்​சிஏ லெவன் 90 ஓவர்​களில் 8 விக்​கெட் கள் இழப்புக்கு 414 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ஆ​திஷ் 124 பந்​துகளில், 6 சிக்​ஸர்கள், 4 பவுண்​டரி​களு​டன் 102 ரன்​கள் விளாசி​னார். துஷார் ரஹேஜா 86, பி.சச்​சின் 74 ரன்கள் சேர்த்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x