Published : 15 Aug 2025 07:26 AM
Last Updated : 15 Aug 2025 07:26 AM
சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
இதில் ஆடவர் இறுதிப் போட்டியில் பெரம்பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்கில் முகப்பேர் வேலம்மாள் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது இடத்தை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியும், 4-வது இடத்தை ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியும் பெற்றன.
சிறுமியர் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மெக்டலின் 25-18, 25-7 என்ற செட்கணக்கில் நுங்கம்பாக்கம் வித்யோதயா மெட்ரிக் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 3-வது இடத்தை சென்னை மேல்நிலைப் பள்ளியும், 4-வது இடத்தை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளியும் கைப்பற்றின.
பரிசளிப்பு வழாவில் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவராம், தெற்கு ரயில்வே அதிகாரி சுனிதா, சான் அகாடமி பள்ளி முதல்வர் ஹேமலதா, சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் துணை தலைவர் தினகர், செயல் தலைவர் ஜெகதீசன், பொருளாளர் பழனியப்பன், செயலாளர் கேசவன், முன்னாள் துணை தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT