Published : 13 Aug 2025 03:23 AM
Last Updated : 13 Aug 2025 03:23 AM

புச்சிபாபு கிரிக்கெட் தொடர் ஆக.18-ம் தேதி தொடக்கம்

சென்னை: ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா அணிகள் இடம் பெற்றுள்ளன.

‘பி’ பிரிவில் இந்தியன் ரயில்வே, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா, பரோடா அணிகளும் ‘சி’ பிரிவில் டிஎன்சிஏ லெவன், மும்பை, ஹரியாணா, பெங்கால் அணிகளும் ‘டி’ பிரிவில் ஹைதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், ஜார்க்கண்ட் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகள் 3 நாட்களும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி 4 நாட்களும் நடத்தப்படுகிறது.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரி​விலும் முதலிடம் பிடிக்​கும் அணி​கள் அரை இறு​திக்கு முன்​னேறும். அரை இறுதி ஆட்​டங்​கள் ஆகஸ்ட் 31 முதல் செப்​டம்​பர் 3 வரை நடை​பெறுகிறது. இறு​திப் போட்டி செப்​டம்​பர் 6 முதல் 9 வரை நடை​ பெறுகிறது. லீக் போட்​டிகள் கோஜன் ஏ, குரு​நானக் கல்​லூரி உள்ளிட்ட மைதானங்​களில் நடை​பெறுகிறது.

இந்த கிரிக்​கெட் தொடர் குறித்த பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் டிஎன்​சிஏ தலை​வர் பி.அசோக் சிகாமணி, துணைத் தலை​வர் ஆடம் சையத், சிஎஸ்கே தலைமை செயல் அதி​காரி காசி விஸ்​வ​நாதன், பொருளாளர் சீனி​வாச​ராஜ், துணை செய​லா​ளர் ஆர்​.என்​.​பா​பா, இணை செய​லா​ளர் சிவகு​மார், புச்​சி​பாபு கிரிக்​கெட் கமிட்​டி​யின் தலை​வர் டி.​வி.ர​வி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

டிஎன்​சிஏ பிரெசிடெண்ட் லெவன் தொடக்க ஆட்​டத்​தில் இமாச்​சல்​ பிரதேசத்துடனும் டிஎன்​சிஏ லெவன் அணி, மும்​பை​யுடனும் பலப்​பரீட்​சை நடத்​துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x