Published : 12 Aug 2025 02:05 AM
Last Updated : 12 Aug 2025 02:05 AM
சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐஒபி 4-1 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ மேஜிக் அணியை வீழ்த்தியது. ஐஓபி அணி சார்பில் பர்தாஸ் திர்கே 3 கோல்களையும், சுதீப் சிராம்கோ ஒரு கோலும் அடித்தனர்.
‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு ரயில்வே ஏஜி அலுவலக அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தெற்கு ரயில்வே தரப்பில் சண்முகமும், ஏஜி அலுவலகம் அணி தரப்பில் வீர தமிழனும் தலா ஒரு கோல் அடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT