Published : 09 Aug 2025 01:56 AM
Last Updated : 09 Aug 2025 01:56 AM

கூடைப்பந்தில் டிஏவி சாம்பியன்!

சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

200 பள்ளிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் யு-14 சிறுமியர் பிரி வில் பருத்திப்பட்டு வேலம்மாள் அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் செங்கல்பட்டு விகாஷ் மந்த்ரா அணியை 50-27 என்ற கணக்கில் வீழ்த்தியது.

சிறுவர் பிரிவில் பொன்னேரி வேலம்மாள் அணி 46-21 என்ற கணக்கில் தூத்துக்குடி விகாஷ் பள்ளியை தோற்கடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றியது. யு-17 சிறுமியர் பிரிவில் கோவை சுகுணா பிஐபி பள்ளியும், சிறுவர் பிரிவில் பொன்னேரி வேலம்மாள் சர்வதேச பள்ளியும் முதலிடம் பிடித்தன.

யு-19 சிறுமியர் பிரி​வில் முகப்​பேர் டிஏவி பள்ளி 46-44 என்ற கணக்​கில் ஹார்ட்ஃபுல்​னெஸ் இன்​டர்​நேஷனல் பள்ளி அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது. சிறு​வர் பிரி​வில் ஆலப்​பாக்​கம் வேலம்​மாள் பள்ளி முதலிடம் பிடித்​தது. பரிசளிப்பு விழா​வில் ஆர்​.எம்​.கே.கல்விக் குழு​மத்​தின் தலை​வர் ஆர்​.எஸ். முனிரத்​தினம், துணைத் தலை​வர் கிஷோர், இயக்​குனர் ஜோதி நாயுடு, செய​லா​ளர் எலமஞ்சி பிரதீப், துணைத் தலை​வர் துர்​காதேவி பிரதீப், பாட​சாலா பள்​ளி​யின் முதல்​வர் சந்​திரிகா பிர​சாத் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

சிறப்பு விருந்​தினர்​களாக இந்​திய கூடைப்​பந்து சம்​மேளனத்​தின் தலை​வர் ஆதவ் அர்​ஜு​னா, தமிழ்​நாடு கூடைப்​பந்து சங்​கத்​தின் மூத்த துணை தலை​வர் செந்​தில் தியாக​ராஜன், இணை செய​லா​ளர் அருள் வெங்​கடேஷன், இந்​திய கூடைப்​பந்து அணி​யின் பயிற்​சி​யாளர் ஜீனா ஜக்​காரி​யா, திருவள்​ளூர் மாவட்ட சங்க துணைதலை​வர் ராஜ் குமார் உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x