Published : 06 Aug 2025 07:14 AM
Last Updated : 06 Aug 2025 07:14 AM

கூடைப்பந்து: நாளந்தா அணி வெற்றி!

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் ஆடவர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு ஆட்டத்தில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது.

சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி 35-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி அணியை வீழ்த்தியது.

இதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் மதுரை ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி அணி 31-17 என்ற புள்ளிகள் கணக்கில் மணப்பாக்கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை வென்றது. ஆடவர் யு-14 பிரிவில் வைரம்ஸ் பப்ளிக் பள்ளி அணி 21-06 என்ற கணக்கில் ஸியோன் ஜெனிஸிஸ் அணியைத் தோற்கடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x