Published : 05 Aug 2025 07:34 AM
Last Updated : 05 Aug 2025 07:34 AM

சென்னையில் தொடங்கியது 5,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ள கூடைப்பந்து போட்டி

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் யு-19 பிரிவில் மணப்பாக்கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வெற்றி பெற்றது.

சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது.

3 நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டியை ஆர்​.எம்​.கே. கல்விக் குழு​மத்​தின் தலை​வர் ஆர்​.எஸ். முனிரத்​தினம் தொடங்கி வைத்​தார். துணைத் தலை​வர் கிஷோர், இயக்​குனர் ஜோதி நாயுடு, செய​லா​ளர் எலமஞ்சி பிரதீப், பாட​சாலா பள்​ளி​யின் முதல்​வர் சந்​திரிகா பிர​சாத் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

இந்த தொடரில் 200 பள்​ளி​களை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ, மாணவி​கள் கலந்து கொண்​டுள்​ளனர். தொடக்க நாளில் யு-19 பிரிவில் நடை​பெற்ற ஆட்​டங்​களில் மணப்​பாக்​கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 17-7 என்ற கணக்கில் நாராயணா இ-டெக்னோ பள்​ளியை​யும், முகப்​பேர் டிஏவி 28-16 என்ற கணக்​கில் ஸியோன் பள்​ளியை​யும் தோற்​கடித்​தன.

யு-17 பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டங்​களில் சச்​சி​தானந்த ஜோதி நிகேதன் இன்​டர்​நேஷனல், நிகேதன் பாடசாலா, வைரம்ஸ் பப்​ளிக் பள்ளி அணி​களும், யு-14 பிரி​வில் கேகே நகர் பிஎஸ்​பிபி பள்​ளி​யும்​ வெற்​றி பெற்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x