Published : 02 Aug 2025 02:55 PM
Last Updated : 02 Aug 2025 02:55 PM
லண்டன்: இங்கிலாந்து அணி உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு அணிகளின் கடந்த கால செயல்பாடு குறித்து பார்ப்போம்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடரின் கடைசி மற்றும் 5-வது போட்டி தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 224 மற்றும் இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இதன் மூலம் இந்தியா இந்த ஆட்டத்தில் 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் மூன்று நாட்கள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கியது. இந்த சூழலில் ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து பார்ப்போம்.
ஓவல் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய நிலையில் வெளிநாட்டு அணிகளின் செயல்பாடு எப்படி?
ஓவல் மைதானத்தில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு!
ஓவல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற எவ்வளவு ரன்கள் தேவை: ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளை வைத்து பார்க்கும் போது இந்தப் போட்டியிலும் தரமான த்ரில்லிங் சேஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தற்போது லண்டனில் நிலவும் மழை மேகங்கள் சூழ்ந்த வானிலை சூழலை வைத்து பார்க்கும்போது 200+ ரன்களை சேஸ் செய்வது இங்கிலாந்துக்கு சவாலாக இருக்கும். அதேபோல இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் மொத்தம் 15 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. இதை இரண்டு அணிகளும் நிச்சயம் கவனத்தில் கொள்ளும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT