Published : 29 Jun 2025 08:30 AM
Last Updated : 29 Jun 2025 08:30 AM
கொழும்பு: இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ விலகியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வித்தி யாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “வங்கதேச டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது என்னுடைய தனிப்பட்ட முடிவாகும். கிரிக்கெட்டின் 3 விதமான வடிவங்களுக்கு (டெஸ்ட், ஒருநாள், டி20) 3 கேப்டன் என்ற நடைமுறை சரி என்று எனக்குத் தோன்றவில்லை" என்றார். தற்போது வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக மெஹதி ஹசன் மிராஸும், சர்வதேச டி20 அணியின் கேப்டனாக லிட்டன் தாஸும் செயல்பட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT