Published : 27 Jun 2025 01:09 AM
Last Updated : 27 Jun 2025 01:09 AM

ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப்: 3 பிரிவிலும் இந்தியா பட்டம் வென்று அசத்தல்

கோலாலம்பூர்: மலேசியா தலை நகரான கோலாலம்பூரில் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.

ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், அபய் சிங் ஜோடி 2-1 (9-11, 11-5, 11-5) என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் நூர் ஜமான், நசீர் இக்பால் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஆட்டம் 88 நிமிடங்கள் நடைபெற்றது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங் ஜோடி இறுதிப் போட்டியில் 2-1 (8-11, 11-9, 11-10) என்ற செட் கணக்கில் மலேசியாவின் அய்னா அமனி, ஸின் யிங் யி ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அபய் சிங், அனஹத் சிங் 2-0 (11-9, 11-7) என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ரேச்சல் அர்னால்ட், அமீசன்ராஜ் சந்திரன் ஜோடியை தோற்கடித்தது. இந்த ஆட்டம் 28 நிமிடங்கள் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x