Published : 23 Jun 2025 07:16 AM
Last Updated : 23 Jun 2025 07:16 AM
காலே: 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையே காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேத்யூஸ் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி20 போட்டிகளில் விளையாடுவேன். 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்காக விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT