Published : 20 Jun 2025 07:51 AM
Last Updated : 20 Jun 2025 07:51 AM
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனையான பெட்ரா விட்டோவா வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க ஓபன் தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி லண்டனில் தொடங்க உள்ள விம்பிள்டன் தொடரில் கலந்துகொள்ள 35 வயதான பெட்ரா விட்டோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளில் அவர், தனது ஓய்வு முடிவை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT