Last Updated : 19 Jun, 2025 10:36 PM

 

Published : 19 Jun 2025 10:36 PM
Last Updated : 19 Jun 2025 10:36 PM

100+ கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த ஐபிஎல் 2025

நடந்து முடிந்த ஐபிஎல் 2025 போட்டிகள் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் மொத்தம் 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி அணி - பஞ்சாப் கிங்ஸ் அணி மோதிய இந்த இறுதிப் போட்டிதான் அதிக பார்வைகளை பெற்ற போட்டி என்று ஜியோஸ்டார் தளம் தெரிவித்துள்ளது. இந்த போட்டியை தொலைகாட்சி வாயிலாக 16.9 கோடி மக்கள் பார்த்துள்ளனர், டிஜிட்டல் வழியாக 89.2 கோடி பார்வைகள் இந்த போட்டிக்கு கிடைத்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு 16.74 பில்லியன் நிமிட பார்வைகளை இப்போட்டி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டை விட ஜியோஹாட்ஸ்டார் தளம் 29% அதிக பார்வைகளை பெற்றுள்ளது. இந்த ஆண்டு மிக அதிகமான ரசிகர்கள் பெரிய திரை கொண்ட டிவிக்களில் ஐபிஎல் போட்டிகளை பார்த்துள்ளதாகவும் ஜியோஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது. இந்த சீசனுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வாயிலாக நேரடி ஒளிபரப்பில் 456 பில்லியன் நிமிடபார்வைகள் கிடைத்துள்ளது.

ஐபிஎல் 2025 சீசனின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஜியோஹாட்ஸ்டார் தளம் மூலம், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x