Published : 13 Jun 2025 07:19 AM
Last Updated : 13 Jun 2025 07:19 AM

துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் சிஃப்ட் கவுர் சர்மா!

முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 453.1 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

நார்வேயின் ஜீனெட் ஹெக் டியூஸ்டாட் 466.9 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், சுவிட்சர்லாந்தின் எமிலி ஜேகி 464.8 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x