Published : 03 Jun 2025 07:22 PM
Last Updated : 03 Jun 2025 07:22 PM
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட் செய்கிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் கடந்த மார்ச் 25-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சுமார் 470 ரன்கள் குவிக்கப்பட்டது. டாஸின் போது ஆடுகளம் ரன் குவிக்க ஏதுவாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
நடப்பு சீசனில் இந்த மைதானத்தில் 8 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட் செய்த அணிகள் 6 முறை வென்றுள்ளன. இரண்டாவதாக பேட் செய்த அணி 2 முறை வென்றுள்ளது.
ஆடும் 11 வீரர்கள் - ஆர்சிபி: பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல்.
இம்பாக்ட் சப்ஸ் - ஆர்சிபி: ரஷிக் சலாம், மனோஜ் பண்டகே, டிம் சைய்ஃபெர்ட், ஸ்வப்னில் சிங், சுயாஷ் சர்மா.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரவீன் துபே, சூர்யன்ஷ் ஷெட்கே, சேவியர் பார்ட்லெட், ஹர்ப்ரீத் பிரார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT