Published : 02 Jun 2025 07:58 AM
Last Updated : 02 Jun 2025 07:58 AM

தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவராக சண்முகம் தேர்வு

தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கு தேர்வாகியுள்ள புதிய நிர்வாகிகள்.

சென்னை: தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​துக்கு புதிய நிர்​வாகி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். புதிய தலை​வ​ராக சண்​முகம் தேர்​வாகி​யுள்​ளார்.

தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் நிர்​வாகி​கள் தேர்​தல் கடந்த மாதம் 31-ம் தேதி காலை 10 மணிக்கு நேரு விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. கடந்த 2018-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தல் செல்​லாது என நீதி​மன்​றம் அறி​வித்​ததை தொடர்ந்து தற்​போது மறு தேர்​தல் நடை​பெற்​றது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முன்​னாள் பதி​வாளர் பாலசுப்​பிரமணி​யன் இந்​தத் தேர்​தலுக்கு பொறுப்​பாள​ராக பணி​யாற்​றி​னார். தேர்​தல் வாக்​குப்​ப​திவு நடை​பெற்று முடிந்​ததும் வாக்​கு​களை எண்​ணும் பணி​கள் தொடங்​கின.

கால்​பந்து சங்க தலை​வர் பதவிக்​குப் போட்​டி​யிட்ட சண்​முகம் 44 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். எதிர்த்​துப் போட்​டி​யிட்ட சுரேஷ் 38 வாக்​கு​களைப் பெற்​றார். துணைத் தலை​வர்​களாக பாலசுப்​பிரமணி​யம்​(49 வாக்​கு​கள்), கண்​ணன்​(47 வாக்​கு​கள்), மணி (50 வாக்​கு​கள்), ராதாகிருஷ்ணன்​(59 வாக்​கு​கள்), ரமேஷ் (55 வாக்​கு​கள்) தேர்​வாகி​யுள்​ளனர்.

பொருளாள​ராக மணி​கண்​டன் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். அவர் 48 வாக்​கு​களைப் பெற்​றார். பொருளாளர் பதவிக்​குப் போட்​டி​யிட்ட சிவானந்​தம் 32 வாக்​கு​கள் பெற்​று அடுத்​த இடத்​தைப்​ பிடித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x