Published : 02 Jun 2025 07:40 AM
Last Updated : 02 Jun 2025 07:40 AM
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலீனா ஸ்விட்டோலினா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் எலீனா ஸ்விட்டோலினாவும், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியும் மோதினர். இதில் எலீனா 4-6, 7-6 (6), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் பிரிவு 4-வது சுற்றில் அமெரிக்க வீரர் டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்பிரின்னை தோற்கடித்தார்.
போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, செக் குடியரசின் ஆதம் பாவ்லாசக் ஜோடி 2-6, 6-7(5) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், அர்ஜெண்டினாவின் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT