Published : 30 May 2025 08:46 AM
Last Updated : 30 May 2025 08:46 AM

ஐபிஎல் தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை ஆர்சிபி எளிதில் வீழ்த்தியது எப்படி?

ஆர்சிபி அணி வீரர்கள்.

முலான்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்​றில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி.

ஐபிஎல் தொடரில் முலான்​பூரில் நேற்று நடை​பெற்ற பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் - ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஆர்​சிபி அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில் நூவன் துஷாரா நீக்​கப்​பட்டு ஜோஷ் ஹேசில்​வுட் சேர்க்​கப்​பட்​டார். பஞ்​சாப் அணி​யில் ஒரே ஒரு மாற்​றம் இருந்​தது. மார்கோ யான்​சனுக்கு பதிலாக அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் சேர்க்​கப்​பட்​டார்.

பேட்​டிங்கை தொடங்​கிய பஞ்​சாப் அணி, ஆர்​சிபி​யின் பந்​து​வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் மளமளவென விக்​கெட்​களை பறி​கொடுத்​தது. பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்​களில் யாஷ் தயாள் பந்​தை, கவர் திசை​யில் அடிக்க கிருணல் பாண்​டி​யா​விடம் எளி​தாக கேட்ச் ஆனது. மற்​றொரு தொடக்க வீர​ரான பிரப்​சிம்​ரன் சிங் 18 ரன்​கள் சேர்த்த நிலை​யில் புவனேஷ்வர் குமார் பந்தை விளாச முயன்ற போது விக்​கெட் கீப்​பரிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார்.

கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 ரன்​களில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்தை விளாச முயன்ற போது விக்​கெட் கீப்​பரிடம் கேட்ச் ஆனது. தொடர்ந்து ஜோஷ் இங்​லிஷ் 4 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்தை டீப் ஃபைன் லெக் திசை​யில் விளாசிய போது புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்​கிய நேஹல் வதேரா 8 ரன்​களில் யாஷ் தயாள் பந்​தில் ஸ்டெம்​பு​கள் சிதற நடையை கட்​டி​னார்.

இதன் பின்​னர் சஷாங் சிங் 3 ரன்​களில் சுயாஷ் சர்மா பந்​தில் போல்​டா​னார். சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடிய மார்​கஸ் ஸ்டா​யினிஸ் 17 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 26 ரன்​கள் விளாசிய நிலை​யில் சுயாஷ் சர்மா பந்​தில் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார். அறி​முக வீர​ராக களமிறங்​கிய முஷிர் கானை ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் எல்​பிடபிள்யூ முறை​யில் பெவிலியனுக்கு திருப்​பி​னார் சுயாஷ் சர்​மா.

இதைத் தொடர்ந்து ஹர்​பிரீத் பிரார் 4 ரன்​களில் ரோமாரியோ ஷெப்​பர்டு பந்​தில் போல்​டா​னார். மட்​டையை சுழற்ற முயன்ற அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 12 பந்​துகளில், ஒரு பவுண்​டரி, ஒரு சிக்​ஸருடன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் கடைசி வீர​ராக ஜோஷ் ஹேசில்​வுட் பந்​தில் விக்​கெட்​கீப்​பரிடம் பிடி​கொடுத்து வெளி​யேற பஞ்​சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்​களில் 101 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

ஆர்​சிபி அணி தரப்​பில் சுயாஷ் சர்​மா, ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும், யாஷ் தயாள் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். புவனேஷ்வர் குமார், ரோமாரியோ ஷெப்​பர்டு ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

102 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி 10 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 106 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. பில் சால்ட் 27 பந்​துகளில், 6 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் 56 ரன்​கள் விளாசி​னார். ரஜத் பட்​டி​தார் 8 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 15 ரன்​களும் சேர்த்​தார்.

முன்​ன​தாக விராட் கோலி 12 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 12 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தி​லும், மயங்க் அகர்​வால் 13 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் முஷிர் கான் பந்​தி​லும் ஆட்​ட​மிழந்​தனர்.

8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆர்​சிபி அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. அந்த அணி 2016-ம் ஆண்​டுக்​கு பின்​னர்​ தற்​போது​தான்​ இறு​திப்​ போட்​டி​யில்​ கால்​பதித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x