Published : 29 May 2025 04:49 PM
Last Updated : 29 May 2025 04:49 PM
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் - ஷிராக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட் ஜோடி, 41-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சூங் ஹான் ஜியான், முஹம்மது ஹைகல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஷாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 2-வைத்து சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் சபர் காரியமன் மற்றும் முஹம்மது ரெசா ஜோடியை 19-21, 21-16, 21-18 என்ற கணக்கில் ஷாட்விக் - ஷிராக் இணைந்து வீழ்த்தினர். இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 17-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்சயா சென், 19-ம் நிலை வீரரான சீன தைபேவின் லின் ஹன் யியுடன் மோதினார். இதில் முதல் செட்டை லக்சாய சென் 21-15 என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுதத லின் ஹன் அந்த செட்டை 21-17 என தன்வசப்படுத்தினார்.
இதனால் வெற்றியை தீர்மானித்த கடைசி செட் ஆட்டம் பரபரப்பானது. இதில் லக்சயா சென் 5-13 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில் முதுகு வலி காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் லின் ஹன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி காடே ஜோடி 21-16, 21-19 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சென் ஹி யி, பிரான்செஸ்கா கோர்பெட் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் ஹாங்காங்கின் டாங் சுன் மற்றும் டீஸ் யிங் சூட் ஜோடியிடம் நேர் செட்களில் வீழ்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT