Published : 26 May 2025 09:37 AM
Last Updated : 26 May 2025 09:37 AM

‘டாப் 2’ இடத்துக்கு முன்னேறப்போவது யார்? - IPL 2025

சென்னை: லீக் சுற்று ஆட்டங்கள் வரும் 27-ம் தேதி முடிவடைகின்றன. 29-ம் தேதி முதல், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

இன்று நடைபெறவுள்ள பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, தகுதிச்சுற்று முதல் ஆட்டத்துக்கு (குவாலிபையர்-1) தகுதி பெறும். 27-ம் தேதி நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றால், ஆர்சிபி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு முன்னேறும். ஒருவேளை ஆர்சிபி அணி தோல்வி கண்டால், குஜராத் அணி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு தகுதி பெறும்.

ஒருவேளை பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம், முடிவு தெரியாத ஆட்டமாக அமைந்தால், குஜராத் அணி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு முன்னேறும்.

மும்பை அணியுடனான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோற்றாலோ, ஆர்சிபி-லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆர்சிபி தோற்றாலோ, குஜராத், மும்பை அணிகள் முதல் 2 இடங்களைப் பிடிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x