Published : 25 May 2025 09:08 AM
Last Updated : 25 May 2025 09:08 AM
கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் 65-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 23-வது இடத்தில் உள்ள ஜப்பானின் யுஷி தனகாவுடன் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
சர்வதேச பாட்மிண்டன் தொடரில் ஸ்ரீகாந்த் 6-வது வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளார். கடைசியாக அவர், 2019-ம் ஆண்டு இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT