Published : 24 May 2025 01:20 PM
Last Updated : 24 May 2025 01:20 PM

இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் ஃபாலோ-ஆன் ஆடும் ஜிம்பாப்வே

நாட்டிங்காம்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது. ஸாக் கிராவ்லி 124, பென் டக்கெட் 140, ஜோ ரூட் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஆலி போப் 169, ஹாரி புரூக் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 96.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆலி போப் 171, ஹாரி புரூக் 58, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜேமி ஸ்மித் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசாராபானி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணி, முதல் இன்னிங்ஸில் 63.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் கிரேய்க் இர்வின் 42, சீன் வில்லியம்ஸ் 25, சிக்கந்தர் ராஸா 7, வெஸ்ஸி மாதவரே 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனது 2-வது சதத்தை அடித்த தொடக்க வீரரான பிரையன் பென்னட் 139 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஃபாலோ-ஆன் விளையாட இங்கிலாந்து அணி நிர்பந்தித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 10 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்தது. தற்போது ஜிம்பாப்வே அணி 270 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் மூன்றாவது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது ஜிம்பாப்வே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x