Published : 22 May 2025 06:24 AM
Last Updated : 22 May 2025 06:24 AM
கோலாலம்பூர்: மலேசியா பாட்மிண்டன் தொடரில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்எஸ் பிரனாய் 19-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கென்டா நிஷிமோடாவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடைபெற்றது.
மற்ற இந்திய வீரர்களான சதீஷ் குமார் கருணாகரன் 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் டியன் செனையும், ஆயுஷ் ஷெட்டி 20-22, 21-10, 21-8 என்ற கணக்கில் கனடாவின் பிரையன் யங்கையும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 23-21, 13-21, 21-11 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லூ குவாங் ஸுவையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் வியட்நாமை சேர்ந்த நுயென் துய் லின்னுடன் மோதினார். இதில் சிநது 11-21, 21-14, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT