Last Updated : 20 May, 2025 07:08 AM

 

Published : 20 May 2025 07:08 AM
Last Updated : 20 May 2025 07:08 AM

குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன: ஓர் இடத்துக்கு மல்லுக்கட்டும் 3 அணிகள்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 தொடரில் குஜ​ராத் அணி​யின் அபார வெற்​றி​யால் அந்த அணி​யுடன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), பஞ்​சாப் அணி​களும் பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்​துள்​ளன. மீதம் உள்ள ஓர் இடத்​துக்கு மும்​பை, லக்​னோ, டெல்லி அணி​கள் மல்​லுக்​கட்ட உள்​ளன.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 10 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. 200 ரன்​கள் இலக்கை துரத்​திய குஜ​ராத் அணி சாய் சுதர்​சன் 61 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் விளாசிய 108 ரன்​கள் மற்​றும் கேப்​டன் ஷுப்​மன் கில் 53 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் விளாசிய 93 ரன்​கள் உதவி​யுடன் 6 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி பெற்​றது.

குஜ​ராத் அணிக்கு இது 9-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் 18 புள்​ளி​களை குவித்து முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற்​றது குஜ​ராத் அணி. அந்த அணி 12 ஆட்​டங்​களில் 9 வெற்​றி, 3 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது. குஜ​ராத் அணி​யின் வெற்​றி​யால் ஆர்​சிபி, பஞ்​சாப் அணி​களும் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறி உள்​ளன.

ஆர்​சிபி 12 ஆட்​டங்​களில் விளை​யாடி 8 வெற்​றி, 3 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 17 புள்​ளி​கள் குவித்து 2-வது இடத்​தி​லும், பஞ்​சாப் அணி 12 ஆட்​டங்​களில் 8 வெற்​றி, 3 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 17 புள்​ளி​கள் குவித்து 3-வது இடத்​தி​லும் உள்​ளன. மும்பை இந்​தி​யன்ஸ் அணி 14 புள்​ளி​களு​டன் 4-வது இடத்​தி​லும், டெல்லி கேப்​பிடல்ஸ் 13 புள்​ளி​களு​டன் 5-வது இடத்​தி​லும், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் (ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான நேற்​றைய ஆட்​டம் நீங்​கலாக) 10 புள்​ளி​களு​டன் 7-வது இடத்​தி​லும் உள்​ளன. இதில் மும்​பை, டெல்லி அணி​களுக்கு தலா 2 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்​ளன. லக்னோ அணிக்கு நேற்​றைய ஆட்​டம் (ஹைத​ரா​பாத்​துக்கு எதி​ராக) உட்பட 3 ஆட்​டங்​கள் இருந்​தன.

இந்த வகை​யில் அதி​கபட்​ச​மாக மும்பை அணி 18 புள்​ளி​களை​யும், டெல்லி அணி 17 புள்​ளி​களை​யும், லக்னோ அணி 16 புள்​ளி​களை மட்​டுமே எட்ட முடி​யும். இதன் அடிப்​படை​யிலேயே ஆர்​சிபி, பஞ்​சாப் அணி​கள் பிளே ஆஃப் சுற்​றில் கால் ​ப​தித்​துள்​ளன. 3 அணி​கள் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறி​விட்ட நிலை​யில் மீதம் உள்ள ஓர் இடத்​துக்கு மும்​பை, டெல்​லி, லக்னோ அணி​கள் மல்​லுக்​கட்ட உள்​ளன.

டெல்லி கேப்​பிடல்ஸ் எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களில் மும்பை இந்​தி​யன்ஸ் (21-ம் தேதி), பஞ்​சாப் கிங்ஸ் (24-ம் தேதி) அணி​களு​டன் மோத உள்​ளது. இந்த 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றால் மட்​டுமே டெல்லி அணி​யால் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற முடி​யும். மும்பை அணி​யிடம் தோல்வி அடைந்​தால் டெல்லி அணி தொடரில் இருந்து வெளி​யேறும்.

14 புள்​ளி​களு​டன் உள்ள மும்பை அணி: டெல்லி அணி​யிடம் தோல்வி அடைந்​தா​லும் கடைசி ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணியை வீழ்த்​தும் பட்​சத்​தில் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெற முடி​யும். ஆனால் இது நிகழ​வேண்​டு​மா​னால் டெல்லி அணி தனது கடைசி ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி​யிடம் தோல்வி அடைய வேண்​டும். மேலும் லக்னோ அணி தனது எஞ்​சி​யுள்ள ஆட்​டங்​களில் ஏதேனும் ஒன்​றில் தோற்க வேண்டும். லக்னோ அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் தனது எஞ்​சிய அனைத்து ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற வேண்​டும். இது நிகழ்ந்​தா​லும் டெல்​லி, மும்பை அணி​கள் தங்​களது ஆட்​டங்​களில்​ தோல்வி​களை சந்​திக்​க வேண்​டும்​.

முதல் இரு இடங்களுக்கு குறி.. குஜராத் டைட்டன்ஸ் அணி பகேற்ற 4 சீசன்களில் 3-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ஆர்பிசி அணி கடந்த 6 வருடங்களில் 5-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளது. பஞ்சாப் அணி 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் லீக் சுற்றை முதல் 4 இடங்களுக்குள் நிறைவு செய்ய உள்ளது. 3 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட போதிலும் லீக் சுற்றை முதல் இரு இடங்களுக்குள் நிறைவு செய்வதை நோக்கமாக கொண்டு செயல்படக்கூடும். ஏனெனில் முதல் இரு இடங்களுக்குள் லீக் சுற்றை நிறைவு செய்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு அந்த அணிகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மாறாக தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இதன்படி அந்த அணி 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடும். இதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x